கோவை அறம் அறக்கட்டளை மற்றும் பிஎஸ்ஜி மேலாண்மைக் கல்லூரி மாணவர்கள் இணைந்து நடத்தும் தூய்மைப் பணித்திட்டம் நிறைவு விழா மற்றும் பள்ளி வளாக சுற்றுப்புறச் சூழல் பற்றிய விழிப்புணர்வுப் பிரச்சாரம் இன்று கோவை கரும்புக்கடை பகுதியில் செயல்பட்டு வரும் அத்தார் ஜமாத் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
இந்நிகழ்வின் ஒரு பகுதியாக அரசு உதவுபெரும் பள்ளியான அத்தார் ஜமாத் பள்ளிக் கட்டிடம் 30 ஆயிரம் சதுரடி பரப்பளவில் வர்ணம் அடித்து தரப்பட்டது. மேலும், பள்ளி வளாகத்தில் தூய்மையை கருத்தில் கொண்டு அப்பள்ளிக்கு குப்பைத்தொட்டிகள், வகுப்பறை தூய்மை செய்யும் கருவிகள், தண்ணீர் அருந்த பாத்திரங்கள், குவளை, கழிப்பிடத் தூய்மைக்கு வாளி உள்ளிட்ட பல்வேறு உபகரணங்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் அறம் அறக்கட்டளை நிறுவனர், உறுப்பினர்கள், அத்தார் ஜமாத் பள்ளி ஆசிரியர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வின் ஒரு பகுதியாக அரசு உதவுபெரும் பள்ளியான அத்தார் ஜமாத் பள்ளிக் கட்டிடம் 30 ஆயிரம் சதுரடி பரப்பளவில் வர்ணம் அடித்து தரப்பட்டது. மேலும், பள்ளி வளாகத்தில் தூய்மையை கருத்தில் கொண்டு அப்பள்ளிக்கு குப்பைத்தொட்டிகள், வகுப்பறை தூய்மை செய்யும் கருவிகள், தண்ணீர் அருந்த பாத்திரங்கள், குவளை, கழிப்பிடத் தூய்மைக்கு வாளி உள்ளிட்ட பல்வேறு உபகரணங்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் அறம் அறக்கட்டளை நிறுவனர், உறுப்பினர்கள், அத்தார் ஜமாத் பள்ளி ஆசிரியர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.